Tuesday 17 December 2013

Indian Government started it's new Online Spy Program - NETRA - உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் "நேத்ரா" - 'Netra' - a NEtwork TRaffic Analysis என்னும் ஆன்லைன் உளவுத்துறையை துவக்கி உள்ளது.
ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் பாதுக்காப்புக்காக ஒட்டு கேட்பது - டேட்டா இன்டர்செப்ட் செய்வது போன்ற பல விஷயங்களை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியா "நேத்ரா" என்னும் ஒரு பிராஜக்ட்டை India's Centre for Artificial Intelligence and Robotics (CAIR), Defence Research and Development Organisation (DRDO) laboratory இவர்களின் உதவியோடு ஐ பி எனப்படும் இன்டலஜின்ஸ் பீரொ / இந்தியா டமஸ்டிக் இன்டலிஜன்ஸ் பீரோ / ரா என்னும் மூன்று முக்கிய உளவுத்துறைக்கு தகவல்கள் / கால்கள் / பேச்சுகள் என அனைத்தையும் ஷேர் செய்யும்.

நேத்ரா என்னும் இந்த டெக்னாலஜி கணனியின் மென் பொருள் போன்றது தான் இதன் மூலம் இந்தியாவில் தீவரவாதிகள் சிலர் ஸ்கைப் / கூகுள் டாக் / இன்டர்னெட் டெலிஃபோனி மூலம் பேசும் போது சில சொற்களான = பாம் - வெடி - குண்டு போன்ற பல தீவரவாத வார்த்தை உபயோகபடுத்தப்பட்டால் உடனே அது இவர்களை அலெர்ட் செய்யும். சிறிய அளவு பறக்கும் டிரொன் நேத்ராவும் உருவாக்கியுள்ளனர். இது 200 மீட்டர் உயரத்தில் 2.5 கிலோமீட்டர் வரை பறந்து கண்கானிக்கும்.

இதன் மூலம் 1.5 கிலோமீட்டர் ஏரியவில் நடக்கும் விஷயத்தை பார்க்கவும், பேசுவதை டிரான்ஸ்மீட்டர் மூலம் வயர்லெஸ்ஸில் கிடைக்க வைக்க முடியும். தமிழர் ஆதித்தன் தலைமையில் 2008 ஆம் ஆண்டு இந்த நேத்ரா பறக்கும் உளவு மெஷினுக்கு அக்னி விருது வழங்கி கவுரவித்தது நினைவிருக்கலாம். அதனால உங்களின் ஒவ்வொரு ஆன்லைனும் இந்தியாவின் ஏதாவது ஒரு உளவுத்துறை கண்கானிக்கும் என்பதில் மாற்றூக்கருத்து இல்லைங்கோ.

No comments:

Post a Comment