Saturday 7 February 2015

திருப்பதி கோவில் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கு திருமலை தபால் நிலையத்தில் 5 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கீடு


நகரி, பிப்.7– 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும். இதனை அறியாத கிராம மக்கள் கோவிலுக்கு வந்து டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் கிராம மக்களும் பயன்பெறும் வகையில் தபால் நிலையத்தில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் வசதியை தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது.

ஆந்திரா–தெலுங்கானாவில் உள்ள 97 தபால் நிலையங்களில் இந்த வசதி முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் தினமும் 20 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. இருந்த போதிலும் பலர் இது தெரியாமல் திருமலை வந்து ஏமாற்றம் அடைகிறார்கள். இதனால் திருமலை தபால் நிலையத்தில் ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்காக இங்கு 4 இன்டர் நெட் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் இந்த மையம் செயல்படும். இங்கு தினமும் 5 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டு உள்ளது.


Source:Maalaimalar தமிழ்

No comments:

Post a Comment