இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் .
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீ தின் ஊரிலே பிறந்திருக்கிறார் ! - லூக்கா 2:10-11
" அவள் ஒரு குமாரனை பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்" - மத்தேயு 1:21அன்பான சகோதர,சகோதிரிகளே வானத்தையும்,பூமியையும் படைத்த உன்னதமான கடவுள் மனிதனாக பிறந்தார் அவர்தான் இயேசு .
கடவுள் ஏன் மனிதனாக பிறந்தார் :
அநியாயத்தினாலும்,வேசித்தனத்தினாலும்,துரோகத்தினாலும்,பொருளாசையினாலும்,குரோதத்தினாலும்,பொறாமையினாலும்,கொலையினாலும்,வாக்குவாதத்தினாலும்,வஞ்சத்தினாலும்,வன்மத்தினாலும் நிறைந்தவர்களாய்........இப்படிப்பட்ட கொடிய பாவிகளாய் இருக்கிற மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து இரட்சிப்பதர்க்காகவே இந்த உலகத்திற்கு வந்தார்.
மனிதனாக பிறந்த இயேசு 30 வயது வரை சாதாரண மனிதனாக,நல்ல மகனாக குடும்பத்திற்கு ஒத்தாசை செய்தும், உழைத்தும் குடும்பத்தோடு இருந்தார் .
31வது வயதிலிருந்து 33வது வயது வரை கடவுளைப்பற்றியும் ,பரலோகத்தைப்பற்றியும், பரலோக இராஜியத்தை அடைய மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும் போதித்தார் . 33வது வயதில் யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
இரத்த பலி இல்லாமல் பாவ விமோசனம் இல்லை. ஆகவே இயேசு சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்முடைய பாவங்களுக்காக அவர் பலியானார் .நம்மை இரட்சித்தார் .
இதற்காகவே இறைவன் இயேசு மனிதனாக இந்த உலகிற்கு வந்தார் .
" தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசுவை ) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்,நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைத்தந்தருளி (சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து ) இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்."-யோவான் 3:16
POSTAL ASSISTANT
HASTHAMPATTI S.O
SALEM 636 007
No comments:
Post a Comment