Friday 1 April 2016

பணி நிறைவுப் பாராட்டு !

நமது சேலம் அஞ்சல் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ,நாமக்கல் கோட்ட முன்னால் செயலர் ,திருச்செங்கோடு கிளையின் முன்னால் செயலர் ,திருப்பூர் கோட்டத்தின் உதவி தலைவர்  ,திருப்பூர் அஞ்சலகத்தின் தலைமை அதிகாரியுமான (POSTMASTER GRADE III) நமது தோழர் P.K.இராமசாமி அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா புகைப்படங்கள் :
இடம் :சேலம்





 இலாக்காவிலிருந்து பணி  நிறைவு பெற்ற  அன்புக்கும் பெரு  மதிப்புக்கும் உரிய  மூத்த தோழர்   PKR  என்று அன்புடன் அழைக்கப் படும் தோழர் . P .K . இராமசாமி அவர்கள்  நாமக்கல் கோட்டச் செயலராகவும், திருச்செங்கோடு கிளைச் செயலராகவும்  திருப்பூர்  கோட்டச்  சங்கத்தின் உதவித் தலைவராகவும்  பலகாலம்  சிறப்பாகப் பணியாற்றி  நம் NFPE இயக்கத்திற்கு  வலுச் சேர்த்துள்ளார்.  GDS  ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக தொய்வில்லாத பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.  AIPEU GDS NFPE  சங்கத்தின் முதல் தமிழ் மாநில மாநாட்டை  நாமக்கல் கோட்டத்தில்  மிகச் சிறப்பாக நடத்தி   பெரும் தலைவர்களின் பாராட்டையும் நன் மதிப்பையும்  பெற்ற சிறந்த தோழர். இனியவர். பண்பாளர் .  சிறந்த  உழைப்பாளி . 

தோழர். PKR  அவர்களின்  சேவைகளை நினைவு கூறுகிறோம். அவருக்கு  நம்முடைய சேலம் கிழக்கு கோட்டத்தின்   நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்  ! அவர் எல்லா நலனும்  வளமும்  பெற்று  நீடு  வாழ  வாழ்த்துகிறோம் ! .


தோழர் C.ரவீந்திரன் ,செயலர் (NFPE-P3)
தலைவர் 
(சேலம் அஞ்சல் பணியாளர் கூட்டுறவு சங்கம் )
***************************************************************


நன்றி ! நன்றி ! நன்றி !


விடைபெறுகிறேன் தோழர்களே . ஆம் 31.03.2016 அன்று எனது 41 ஆண்டுகால இலாக்கா பணியை நிறைவு செய்கிறேன் .25.03.1975 அன்று நீலகிரி கோட்டம் உதகை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் எழுத்தராக பணியை துவங்கிய நான் 31.03.2016 அன்று திருப்பூர் HO Postmaster Grade III ஆக பணி நிறைவு செய்கிறேன் .உதகையிலிருந்து சேலம் கிழக்கு கோட்டம் ஏற்காட்டில் சிறிது காலம் பணி புரிந்துவிட்டு 1976 இறுதியில் எனது சொந்த கோட்டமான நாமக்கல் கோட்டத்தில் ஆகஸ்ட் 2013 வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளேன் . இறுதியாக திருப்பூர் தலைமை அஞ்சல் அதிகாரியாக ஓய்வு பெறுகிறேன்.
தொழிற்சங்கத்தில் நாமக்கல் கோட்ட செயலர் ,கோட்ட தலைவர் , திருசெங்கோடு கிளைச் செயலர் , திருப்பூர் கோட்ட உதவி தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் தோழர்கள் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியளிகிறது. 1983 ஒத்துழையாமை இயக்கம் முதல் இன்று வரை நடைபெற்ற அணைத்து போரட்டங்களிலும் என்னை முழுமையாக ஈடுபத்திக் கொண்டதோடு பல போரட்டங்களை தலைமை ஏற்றும் நடத்தியுள்ளேன் .
தலமட்ட போராட்டம்
நாமக்கல் கோட்டம் போராட்டகுனமுள்ள கோட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் GDS பிரச்சனைகளுக்காக எண்ணற்ற தலமட்ட போராட்டங்களை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது . குறிப்பாகவும் சிறப்பாகவும் சொல்ல வேண்டுமானால் ,1977ஆம் ஆண்டு கோட்ட நிர்வாகத்தின் தவறான கணக்கெடுப்பின் காரணமாக 110 BPM தோழர்களுக்கு சம்பள வெட்டு ஏற்பட்டது .இபிரச்சனைகளுக்காக கோட்டச் சங்ககளின் தொடர் உண்ணா விரத போரட்டங்கள் நடத்தி பிரச்சனையை தோழர் சமர் முகர்ஜி MP மூலமாக பாரளமன்றதில் எழுப்பபட்டதின் விளைவாக பிரச்சனை தீர்க்கப்பட்டது . சம்பள வெட்டை நிறுத்தியது மட்டுமல்லாமல் 110 தோழர்களுக்கும் 10% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்பது வரலாற்று சாதனையாகும்
GDS கோரிக்கைகளுக்காக மட்டுமே அஞ்சல் நான்கு சங்கத்தால் அறைகூவல் விடப்பட்ட 19.09.1984 போராட்டத்தில் அஞ்சல் மூன்று சங்கமும் முழுமையாக கலந்து கொண்டு முழு வெற்றி அடைய செய்தோம். 14 SPM தோழர்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யபட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவேற்றிகெல்லாம் முழுகாரணம் அன்று தொழிற்சங்கத்தை வழிநடத்திய தலைவர்கள் C .ரங்கசாமி,C .ராமசாமி , த. மணி , மணிமாறன் , கேரளா கோவிந்தன் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் தான் . அவர்கள் தான் எனது தொழிற் சங்க பணிக்கும் வழிகாட்டியாக இருந்தார்கள் .அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
GDS -NFPE முதல் மாநில மாநாடு
கடந்த 02.12.2012 அன்று நாமக்கல் நகரில் காண்போர் வியகத்தக்க வகையில் GDS NFPE சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது . தலைவர் தோழர் KR , கிருஷ்ணன் , KVS , JR போன்ற தலைவர்கள் வியந்து பாராட்டுகின்ற வகையில் மாநாடு சிறப்பாக நடைபெற்றதில் நானும் முக்கிய பங்கற்றியுள்ளேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதே போன்று கடந்த அக்டோபர் 2014 ல் திருப்பூரில் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிலும் எனது பங்களிப்பை செலுத்தியுள்ளேன் . மேலும் சேலம் அஞ்சல் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர் என்ற வகையில் உரறுப்பினர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளேன் என்பதனை தெரிவித்து கொள்கிறேன் .
தலைவர்களுக்கு நன்றி
எனது தொழிற்சங்க பணிக்கு பெரிதும் ஆதரவு தந்த தலைவர்கள் தோழர்கள் KR ,KVS ,NS ,JR,Ragupathi,SRIVI ,KRG போன்ற தலைவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
திருப்பூர் கோட்டத்தில் எனது தொழிற்சங்க பணிக்கு உதவியாக இருந்த தோழர் A .ராஜேந்திரன் ,M .செல்வகிருஷ்ணன் , V தர்மலிங்கம் , ஜார்ஜ் , சுரேந்திரன் போன்ற தலைவர்களுக்கும் , RMS தோழர்கள் K.இராமமூர்த்தி , கோபாலகிருஷ்ணன் , BSNL தோழர் SS ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
மேலும் எனது தொழிற்சங்க பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய நாமக்கல் , திருசெங்கோடு மற்றும் திருப்பூர் தோழர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்வதோடு NFPE பேரியக்கத்தை சேர்ந்த அணைத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் . எனது அலுவலக பணியில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அலுவலர்கள், நிர்வாகத்தில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய கோட்ட அதிகரிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
NFPTE / NFPE பேரியக்கத்தில் 1975 முதல் 41 ஆண்டுகாலம் நான் உறுப்பினராக இருந்துள்ளேன் என்ற பெருமிதத்தோடு விடை பெறுகிறேன் தோழர்களே .
நன்றி

P .K .இராமசாமி

1 comment:

  1. Dear Com.PKR,

    I pray to the God to give a happy, prosperous, healthy and lengthy retired life.

    Ezhilvanan,
    Bhavani 638301

    ReplyDelete